ராணுவ தாக்குதலை மேற்கொண்டால் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தின்போது தெரிவித்த கருத்துகளுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ உச்சநிலைக் கூட்டத்தின்போது தெரிவித்த கருத்துகளுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தேவை ஏற்பட்டால் வடகொரியாமீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வாஷிங்டன் தயங்காது எனத் திரு. டிரம்ப் கூறியிருந்தார்.
அத்தகைய நடவடிக்கைக்கு உடனடியாகத் தக்க பதிலடி வழங்கப்படும் என பியோங்யாங் எச்சரிக்கை விடுத்தது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு அதிபர் டிரம்ப்பின் கருத்துகள் வருத்தம் அளித்தாய் அந்நாட்டின் ராணுவத் தலைவர் ஜோங் சோன் கூறினார்.