புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச உலகச் சுகாதார நிறுவனம் ஏற்பாடு
உலகச் சுகாதார நிறுவனம், தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம், தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகை COVID-19 கிருமி தொடர்பாகக் கலந்துபேச, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆப்பிரிக்கா, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மேலும் பல நாடுகள் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகள் விமானச் சேவைகளைப் பிரிட்டன் தடை செய்துள்ளது.
டெல்ட்டா வகைக் கிருமியைவிடப் புதுவகை COVID-19 கிருமி எளிதில் பரவக்கூடியது என்று முதற்கட்ட ஆதாரங்கள் காட்டுவதாகப் பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) கூறினார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்புமருந்துகள், புதுவகைக் கிருமிக்கு எதிராகக் குறைந்த செயல்திறன் கொண்டிருக்கலாம் என அவர் சொன்னார்.