நியூஸிலந்தில் ஆயிரக்கணக்கான தாதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம்
நியூஸிலந்தில் ஆயிரக்கணக்கான தாதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம்
நியூஸிலந்தில் சுமார் 30,000 தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் சுமார் 8 மணிநேரம் அந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது.
தரமான ஊதியம், வேலையிட மேம்பாடு ஆகியவை குறித்து அரசாங்கத்திடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தில் இறங்கினர் தாதிகள்.
அரசாங்கம் முன்மொழிந்த 1.4 விழுக்காடு ஊதிய உயர்வையும் நியூஸிலந்துத் தாதிகள் சங்கம் ஏற்க மறுத்தது.
தாதிகள் 17 விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிய அரசாங்கம்
பேச்சுவார்த்தையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தப் போரட்டத்தின்போது தாதிகள் பலகைகள், தட்டிகள் போன்றவற்றை மருத்துவமனைகளின் வெளிப்புறங்களில் ஏந்தித் தங்கள் அதிருப்தியை உணர்த்தினர்.
-Reuters