உலக வரைபடத்திலிருந்து மறைந்துபோன ஏரி
ஒரு காலத்தில் மாடுகளும் குதிரைகளும் தண்ணீர் குடிக்க வந்த இடமாக இருந்த ஒரு ஏரி இப்போது முற்றிலுமாக வறண்டுவிட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஒரு காலத்தில் மாடுகளும் குதிரைகளும் தண்ணீர் குடிக்க வந்த இடமாக இருந்த ஒர் ஏரி இப்போது முற்றிலுமாக வறண்டுவிட்டது.
சிலியின் அக்குலியோ (Aculeo) ஏரி இப்போது உலக வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டது.
இப்போது அங்கு வெடிப்புகள் நிறைந்த மண்ணில் எலும்புகள் மட்டுமே காணப்படுகின்றன.
பத்தாண்டுகளாக ஏரியைச் சுற்றிய வட்டாரங்களில் ஏற்பட்ட வறட்சிக்கு மழையின் அளவு குறைந்துகொண்டே வந்தது தான் முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
ஏரியைச் சுற்றி ஒரு காலத்தில் விறுவிறுப்பாகச் செயல்பட்ட வர்த்தகங்களும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் இப்போது ஏரியைப் போல் மறைந்துவிட்டன.