Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நொபெல் பரிசு வென்ற எழுத்தாளர் V S நைபால் காலமானார்

நொபெல்பரிசு வென்ற எழுத்தாளர் V S நைபால் காலமானார். அவருக்கு வயது 85.

வாசிப்புநேரம் -
நொபெல் பரிசு வென்ற எழுத்தாளர் V S நைபால் காலமானார்

( படம்: AFP/Jan Collsioo )

நொபெல் பரிசு வென்ற எழுத்தாளர் V S நைபால் காலமானார்.
அவருக்கு வயது 85.

தமது அன்புக்குரியவர்கள் சூழ்ந்திருந்த வேளையில் அவர் உயிர் நீத்ததாக, அவரது மனைவி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

"எல்லாவற்றிலும் மிகப் பெறிய சாதனையையே விரும்புவார்."

என்று திரு நைபாலின் மனைவி கூறினார்.

திரு நைபால், ட்ரினிடாட் தீவில் பிறந்தவர்.

இந்திய அரசாங்க அதிகாரியின் புதல்வர்.

உபகாரச் சம்பளம் பெற்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்.

இங்கிலாந்தில் குடிபெயர்ந்தாலும், அவரது வாழ்வின் பெரும்பாலான நாட்களில் அவர் பயணங்களை மேற்கொண்டார்.

30க்கும் அதிகமான நூல்களை எழுத்தியவர், மறைந்த நைபால்.

'புக்கர் பிரைஸ்' விருதை வென்ற முதல் சில எழுத்தாளர்களில் ஒருவர் என்ற பெருமை அவரைச் சேர்கிறது.

1971ஆம் ஆண்டு "In A Free State" நூலுக்காக அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்