எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு அமைதிக்கான நொபெல் பரிசு
எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு அமைதிக்கான நொபெல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு அமைதிக்கான நொபெல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில் திரு. அகமதுக்கு நொபெல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நார்வே தலைநகரமான ஆஸ்லோவில் அவர் நூறாவது நொபெல் பரிசுக்கு உரிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
திரு. அகமதுக்குப் பரிசுத் தொகையாக 900,000 டாலர், வரும் டிசம்பரில் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, எத்தியோப்பியாவின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கிறார் அவர்.
கெடுபிடி மிகுந்த எத்தியோப்பியாவில், கணிசமான சீர்திருத்தங்களை அவர் நிறைவேற்றியுள்ளார்.
எத்தியோப்பியாவுக்கும் அதன் பக்கத்து நாடான எரித்ரியாவுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நீடித்த பூசலை நிறுத்தி, அமைதி உடன்பாடு உருவாகப் பாடுபட்டவர் திரு. அகமது.
சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் எதிர்ப்பாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களை அவர் விடுவித்தார்.
அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக நாடுகடந்து வாழும் பலர் நாடு திரும்பவும் திரு. அகமது அனுமதியளித்தார்.