மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் உலகின் ஆக மோசமான சுகாதாரக் கேடு : ஆய்வு
மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் உலகின் ஆக மோசமான சுகாதாரக் கேடாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் உலகின் ஆக மோசமான சுகாதாரக் கேடாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆய்வைக் குவீன்ஸ் பல்கலைக்கழகம் பெல்ஃபாஸ்ட் (Queen's University Belfast) நடத்தியது.
நகரங்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் இரைச்சல் சத்தம் பல உயிரினங்களுக்குத் தொல்லையாக இருப்பதாக ஆய்வு கூறியது.
சிறு பூச்சிகளில் இருந்து பெரிய திமிங்கிலம் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இரைச்சல் சத்தத்தால் உயிரினங்கள் திசைமாறியும் செல்கின்றன.
இரைச்சல் சத்தம் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக ஆய்வு கூறியது.