Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலேசியாவில் அயர்லந்துப் பெண் மாண்டதற்குப் பசியும் மன உளைச்சலும் காரணமாக இருக்கலாம்

அயர்லந்தைச் சேர்ந்த பதின்ம வயது பெண் நோரா ஏன் குய்ரியின் (Nora Anne Quoirin) பசியாலும், மன உளைச்சலாலும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு மாண்டதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் அயர்லந்துப் பெண் மாண்டதற்குப் பசியும் மன உளைச்சலும் காரணமாக இருக்கலாம்

(படம்: AFP/FAMILY HANDOUT)


அயர்லந்தைச் சேர்ந்த பதின்ம வயது பெண் நோரா ஏன் குய்ரியின் (Nora Anne Quoirin) பசியாலும், மன உளைச்சலாலும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு மாண்டதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரின் உடல் சிரம்பான் காட்டில் உள்ள ஓர் ஓடைக்கு அருகே காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையில் அவரின் குடல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவர் பாலியல் ரீதியாய் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்..

அவர் காணாமற்போன பத்து நாட்களுக்குப் பிறகு அவரின் உடலை நேற்று முன்தினம் காவல்துறையினர் கண்டனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்