Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நார்வே: வில் அம்பு கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் மரணம்

நார்வேயின் காங்ஸ்பர்க் (Kongsberg) நகரில் வில் அம்பு கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 5 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

நார்வேயின் காங்ஸ்பர்க் (Kongsberg) நகரில் வில் அம்பு கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 5 பேர் மாண்டனர்.

தாக்குதலில் இருவர் காயமுற்றனர். காயமுற்றவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி. வேலை முடிந்த பின், கடையில் இருந்த அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்திய நபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

அந்த நபர், தனியாளாகச் செயல்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தத் தாக்குதல் பயங்கரவாத நோக்கம் கொண்டதா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலில் மற்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்