'நியூயார்க் மாநிலத்தில் அதிவேக புல்லட் ரயிலைப் போல COVID-19 கிருமி பரவிக் கொண்டிருக்கிறது': மாநில ஆளுநர்
நியூயார்க் மாநிலத்தில் அதிவேக புல்லட் ரயிலைப் போல கிருமி பரவிக் கொண்டிருக்கிறது. நிலைமையச் சமாளிக்கப் போதுமான மருத்துவச் சாதனங்கள் தேவை என்று அந்த மாநில ஆளுநர் ஆண்டிரு குவோமோ (Andrew Cuomo) கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க் மாநிலத்தில் அதிவேக புல்லட் ரயிலைப் போல கிருமி பரவிக் கொண்டிருக்கிறது. நிலைமையச் சமாளிக்கப் போதுமான மருத்துவச் சாதனங்கள் தேவை என்று அந்த மாநில ஆளுநர் ஆண்டிரு குவோமோ (Andrew Cuomo) கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரிகள் நினைத்ததை விட மிக வேகமாகக் கிருமி பரவிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
நிலைமையைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசாங்கம் எந்த வட்டாரத்துக்கும் போதுமான அளவில் உயிர்காப்புச் சாதனங்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நியூயார்க்கில் மட்டும் இதுவரை 210 பேர் மரணமடைந்தனர். 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.