அமெரிக்கா: சுற்றுபுறத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் மாணவர்கள்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நியூயார்க்கில் நடக்கவிருக்கிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நியூயார்க்கில் நடக்கவிருக்கிறது.
பிரபலங்களும் அரசாங்கச் சார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்புகின்றனர்.
நியூயார்க் அதிகாரிகள் மாணவர்களின் அந்த ஆதரவை வரவேற்றுள்ளனர்.
உலக நிறுவனம் செப்டம்பர் 23-ஆம் தேதி புகையற்ற சுற்றுச்சூழல் தொடர்பில் உச்சநிலை மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இடம்பெறும் நியூயார்க் ஆர்ப்பாட்டம் பூமியைப் பாதுகாக்கும்படி வலியுறுத்தவிருக்கிறது.