சீனத் தலைநிலத்திலிருந்து வருவோருக்கான தடை நீட்டிப்பு - நியூசிலந்து
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), சீனத் தலைநிலத்திலிருந்து வருவோருக்கான தடையை நான்காவது வாரமாக நீட்டித்துள்ளார்.
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), சீனத் தலைநிலத்திலிருந்து வருவோருக்கான தடையை நான்காவது வாரமாக நீட்டித்துள்ளார்.
COVID-19 கிருமிப்பரவலை முறியடிக்கும் நோக்கில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலந்தில் இதுவரை எவருக்கும் COVID-19 கிருமி தொற்றியிருப்பதாகத் தகவல் இல்லை.
என்றாலும், முன்னெச்சரிக்கையாகச் சீனாவிலிருந்து வருவோருக்கான தடை மேலும் எட்டு நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
அந்த முடிவு பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்று திருவாட்டி. ஆர்டன் கூறினார்.