நியூசிலந்துப் பொதுத்தேர்தல்: முன்னணியில் ஜசிண்டா ஆர்டன்
நியூசிலந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.
நியூசிலந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.
பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) இரண்டாம் தவணைக்கும் பொறுப்பில் நீடிப்பாரா என்பதைத் தேர்தல் முடிவுசெய்யும்.
அவரது தொழிலாளர் கட்சி, எதிர்த்தரப்பு தேசியக்
கட்சியைவிட, முன்னணியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
தற்போதைய தேர்தலை "கோவிட் தேர்தல்" எனத் திருவாட்டி ஆர்டன் வருணித்துள்ளார்.
கிருமிப்பரவல் சூழலை அவரது அரசாங்கம் கையாண்டு பெற்ற வெற்றியில், அவரது தேர்தல் பிரசாரம் கவனம் செலுத்தியது.