நியூசிலந்துக் காட்டுத் தீயால் கிராமத்திலிருந்து 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர்
நியூசிலந்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாகச், சுமார் 3,000 பேர் ஒரு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நியூசிலந்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாகச், சுமார் 3,000 பேர் ஒரு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வேக்ஃபீல்ட் (Wakefield) பகுதிக்கு அருகில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிவதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, 150க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.
பலத்த காற்று அந்தப் பகுதியில் வீசும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.
அது நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என அஞ்சப்படுகிறது.