நியூஸிலந்து: COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த திங்கள்கிழமையிலிருந்து தளர்த்தப்படும்
நியூஸிலந்தில் அடுத்த திங்கள்கிழமையிலிருந்து கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவிருக்கின்றன.
நியூஸிலந்தில் அடுத்த திங்கள்கிழமையிலிருந்து கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவிருக்கின்றன.
இருப்பினும், நாட்டின் ஆகப் பெரிய நகரான ஆக்லந்தில் (Auckland) கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
கிருமித்தொற்று 2ஆம் முறையாக தலைதூக்கிய ஆக்லந்தில் கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த வாரம் மறுஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Arden) தெரிவித்தார்.
விமானங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் நடப்பில் இருக்கும் பாதுகாப்பான இடைவெளி நடைமுறை உடனடியாகத் தளர்த்தப்படுகிறது.
சமூக அளவில் நோய்ப்பரவலைக் குறைப்பதில் நியூஸிலந்து வெற்றிகண்டுள்ளதாக இதற்குமுன் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த மாதம் ஆக்லந்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
அதையடுத்து அரசாங்கம் அங்கு மீண்டும் முடக்கநிலையை அமல்படுத்தியது.