Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்து எரிமலை வெடிப்பு - மாண்டோரின் எண்ணிக்கை 5க்கு உயர்வு, பலர் காயம்

நியூசிலந்தின் ஒயிட் ஐலண்ட் (White Island) வட்டாரத்தில் எரிமலை வெடித்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 5க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
நியூசிலந்து எரிமலை வெடிப்பு - மாண்டோரின் எண்ணிக்கை 5க்கு உயர்வு, பலர் காயம்

(படம்: Twitter/zurraspismo)

நியூசிலந்தின் ஒயிட் ஐலண்ட் (White Island) வட்டாரத்தில் எரிமலை வெடித்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 5க்கு உயர்ந்துள்ளது.

20 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமற்போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலை குமுறத் தொடங்கியபோது சுமார் 50 பேர் ஒயிட் ஐலண்டில் இருந்தனர்.

எரிமலை வெடிப்பதற்கு முன் அதன் வாயின் விளிம்பில் சுற்றுப்பயணிகள் நடந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடல், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவில் இருப்போரை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்