Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை நிராகரியுங்கள்-அமெரிக்கர்களுக்கு முன்னைய அதிபர் ஒபாமா வேண்டுகோள்

வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டுமென, முன்னைய அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  

வாசிப்புநேரம் -
வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை நிராகரியுங்கள்-அமெரிக்கர்களுக்கு முன்னைய அதிபர் ஒபாமா வேண்டுகோள்

(படம்: REUTERS/Jonathan Ernst/File Photo)

வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் தலைவர்களை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டுமென, முன்னைய அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இனவாதத்தை இயல்பானதாக்கும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றார் அவர்.

அமெரிக்கா, குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமான தேசம் என்று கூறும் தலைவர்கள், அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உருவாக்குவதாக அவர் சொன்னார்.

திரு. ஒபாமா யாரையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

குடியேறிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளால், வன்முறை மூண்டதைத் தொடர்ந்து உருவான குறைகூறல்களைச் சமாளிக்க, அதிபர் டோனல்ட் டிரம்ப் முயன்றுவரும் வேளையில், திரு. ஒபாமாவின் கருத்து வெளியாகி இருக்கிறது.

வெறுப்புணர்வையும் வெள்ளையின மேலாதிக்கப்போக்கையும் திரு. டிரம்ப் நேற்றுத் தமது உரையில் கண்டித்திருந்தார்.

டெக்சஸிலும் ஒஹாயோவிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், 31 பேர் மாண்டதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.

அதிபர் பதவியில் இருந்தபோது திரு. ஒபாமா, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முயன்று தோல்வியடைந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்