புறப்பட்டது.... ஒலிம்பிக் சுடர்
ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்க இன்னும் நான்கே மாதங்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் சுடர் ஜப்பானின் ஃபுக்குஷிமா (Fukushima) நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்க இன்னும் நான்கே மாதங்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் சுடர் ஜப்பானின் ஃபுக்குஷிமா (Fukushima) நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.
ஜப்பானின் சில தீவுகள், மாவட்டங்கள் உட்பட 47 பகுதிகளில் சுமார் 10,000 பேர் அந்தச் சுடரை ஏந்திச் செல்வர்.
ஃபுக்குஷிமாவின் J-Village அரங்கத்தில் தொடக்க விழா நடந்தது.
2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின்போது எடுக்கப்பட்ட மீட்பு முயற்சிகளை வெளிக்காட்ட விரும்பி, அந்த அரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை மாதம் 23ஆம் தேதி சுடரோடு விளையாட்டு வீரர் ஒருவர் தோக்கியோ சென்று சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக் விளையாட்டுகளை வெளிநாட்டவர்கள் நேரில் சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Agencies/ec/kg