Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் முறையாகச் சமைக்கப்படாத உணவை உட்கொண்ட ஒருவர் மரணம் - சமைத்தவருக்குச் சிறை

பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷையர் (Northamptonshire) வட்டாரத்தில் உள்ள ஓர் ஊரில் முறையாகச் சமைக்கப்படாத உணவை வழங்கிய சமையல்காரருக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் முறையாகச் சமைக்கப்படாத உணவை உட்கொண்ட ஒருவர் மரணம் - சமைத்தவருக்குச் சிறை

(படம்: Pixabay)

பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷையர் (Northamptonshire) வட்டாரத்தில் உள்ள ஓர் ஊரில் முறையாகச் சமைக்கப்படாத உணவை வழங்கிய சமையல்காரருக்கு 4 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜான் குரூஷர் (John Croucher) சமைத்த shepherd’s pie என்ற உணவில் இருந்த இறைச்சி சரியாகச் சமைக்கப்படவில்லை என்று The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதை உட்கொண்ட 92 வயது மாது மாண்டார். மேலும் 31 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

அந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்ததாக The Guardian சொன்னது.

தாம் அவசரப்படுத்தப்பட்டதால் அந்தத் தவறு நேர்ந்ததாக 40 வயது குரூஷர் நீதிமன்றத்தில் கூறினார்.

உணவுக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டதால் அவரின் சிறைத்தண்டனை 12 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்