பாரிஸ் வெடிப்பு: 2 தீயணைப்பாளர்கள் , 1 ஸ்பானிய மாது பலி
பாரிஸில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் இருவரும், ஸ்பானிய மாது ஒருவரும் மாண்டனர்.
பாரிஸில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தீயணைப்பாளர்கள் இருவரும், ஸ்பானிய மாது ஒருவரும் மாண்டனர்.
எரிவாயுக் கசிவைச் சீரமைக்கும் பணியில் அவசரகாலப் பிரிவினர் ஈடுபட்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நூறு மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள கட்டடங்களும் வெடிப்பின்போது ஆட்டங்கண்டதாகத் தகவல்கள் கூறின. அதனையடுத்து, பாரிஸின் மத்திய வட்டாரத்திலிருந்தோர் வெளியேற்றப்பட்டனர்.
வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.