Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

BioNtech நிறுவனம் அதன் தடுப்புமருந்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் தயார்

ஜெர்மனியைச் சேர்ந்த BioNtech மருந்தாக்க நிறுவனம், COVID-19 தடுப்புமருந்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் தான் தயாராய் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஜெர்மனியைச் சேர்ந்த BioNtech மருந்தாக்க நிறுவனம், COVID-19 தடுப்புமருந்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் தான் தயாராய் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தேவையைப் பொறுத்துப் புதிய மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவும் தயார் என, அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சர்க் பொட்டிங் (Sierk Poetting) தெரிவித்தார்.

பொருத்தமான இடம் கிடைத்தால் ஆறு மாதங்களுக்குள் BioNtech, கூடுதல் உற்பத்தி ஆலையைக் கட்டும் என்றும் திரு. பொட்டிங் குறிப்பிட்டார். அதுகுறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் சொன்னார்.

அமெரிக்காவின் Pfizer நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆண்டு, இரண்டரை பில்லியன் தடவை போடுவதற்குத் தேவையான தடுப்புமருந்தை உற்பத்தி செய்ய, BioNtech திட்டமிடுகிறது.

அவற்றுள் 1.4 பில்லியன் மருந்துகள் ஏற்கெனவே விற்பனையாகி விட்டன.

அடுத்த ஆண்டு இரண்டு நிறுவனங்களும், உற்பத்தியை 3 பில்லியனாக உயர்த்தத் திட்டமிடுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்