12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு Pfizer தடுப்புமருந்துச் சோதனை
Pfizer அதன் COVID-19 தடுப்புமருந்தை 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளிடம் சோதிக்கவிருக்கிறது.
Pfizer அதன் COVID-19 தடுப்புமருந்தை 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளிடம் சோதிக்கவிருக்கிறது.
சோதனையின் ஆரம்பக் கட்டத்திற்குக் குறைந்த அளவு மருந்து தேர்ந்தெடுக்கப்படடது.
4,500 குழந்தைகள் ஆய்வில் பங்குபெறுவர்.
அமெரிக்கா, ஃபின்லந்து, போலந்து, ஸ்பெயின் ஆகியவற்றின் 90-க்கும் மேற்பட்ட மருத்துவத்தளங்களில் ஆய்வு நடத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.
144 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வு மூலம், 5 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவு தடுப்புமருந்து சோதிக்கப்படும் என்று Pfizer கூறியது.
செப்டம்பர் மாதத்தில் அதன் தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவு சோதிக்கப்படும்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அதற்கான தரவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-REUTERS