இந்தியா
(AFP / NOAH SEELAM)
ஹைதராபாத் நகரின் COVID-19 நோய்த்தொற்றுச் சோதனை நிலையத்தில், மக்கள் சோதனைக்கு முன் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்கள்.
ஆக அதிகக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா திங்கட்கிழமை அன்று (ஜூலை 6) மூன்றாவது நிலையை எட்டியது.
கொலம்பியா
(AFP / JOAQUIN SARMIENTO)
சபானெட்டா நகராட்சியில் மக்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தவாறு திறந்த வெளித் திரையரங்கில் படம் பார்க்கின்றனர்.
கியூபா
(AFP / YAMIL LAGE)
அர்டெமிசா மாநிலத்தில் முகக்கவசம் அணிந்த ஒருவர் குதிரை வண்டியில் சவாரி செய்கிறார்.
கியூபாவில் சுமார் 2,400 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
86 பேர் மாண்டனர்.
செர்பியா
(AFP / Andrej ISAKOVIC)
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெல்கிரேடின் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே COVID-19 தொடர்பான வார இறுதி ஊரடங்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
நாடாளுமன்றத்திற்குள் வல்லந்தமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் அலெக்சாண்டர் வுசிச்(Aleksandar Vucic) பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இத்தாலி
(AFP / Filippo MONTEFORTE)
தெற்கு இத்தாலியின் அமல்ஃபி கரையோர வீதியில் மக்கள் நடந்துசெல்கின்றனர்.
அமெரிக்கச் சுற்றுப்பயணிகளின் வருகை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்ததால், அமல்ஃபி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.