Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரைத் தேடும் காவல்துறையினர்

பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

வாசிப்புநேரம் -
ஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரைத் தேடும் காவல்துறையினர்

(படம்: AP/Christophe Ena)

பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg) நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

12 பேர் காயமுற்றனர்.

தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு அதிகாரிகள் 300க்கும் அதிகமானோர் 29 வயது சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.

2 ஹெலிகாப்டர்களும் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஸ்ட்ராஸ்பர்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டைப் போன்ற கூடுதலான தாக்குதல்களைத் தவிர்க்கும் நோக்கில் அனைத்து கிறிஸ்துமஸ் சந்தைகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பயங்கரவாத மிரட்டலாக விளங்கலாம் என்பதற்காக அவர் நாட்டின் பாதுகாப்புக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை கூறியது.

இந்நிலையில், ஸ்ட்ராஸ்பர்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குச் சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் சிங்கப்பூரர்கள் யாரும் காயமுற்றதாகத் தகவல் ஏதும் இல்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்