வழக்கமாகச் செய்துகொள்ளும் பல் பரிசோதனைகளை ஒத்திவையுங்கள்: உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம், கொரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் வரும்வரை வழக்கமாகச் செய்துகொள்ளும் பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், கொரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் வரும்வரை வழக்கமாகச் செய்துகொள்ளும் பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
பல் பரிசோதனைகள், பற்களைச் சுத்தம் செய்தல், பராமரிப்பு ஆகியவற்றை ஒத்திவைக்க முடியும் என்று நிறுவனம் அண்மையில் வெளியிட்ட வழிகாட்டிக் குறிப்புகள் தெரிவித்தன.
பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது கொரோனா கிருமி பரவுவதற்கான சாத்தியம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இருப்பினும், சிறிய நுண்ணுயிர்களை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படுமா என்பதை இன்னும் ஆழமாக ஆராய, உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.