அமெரிக்கா: இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் மரணம்
அமெரிக்காவில் நடைபெறும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் மாண்டார்; இன்னொருவர் காயமடைந்தார்.
அமெரிக்காவில் நடைபெறும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் மாண்டார்; இன்னொருவர் காயமடைந்தார்.
சம்பவம் கெண்டாக்கி (Kentucky) மாநிலத்தில் உள்ள ஜெஃபர்சன் ஸ்குவெர் பூங்காவில் நடந்தது.
அங்கு ஆடவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்டார் என்றும் சம்பவம் நடந்த சிறிதுநேரத்தில் அருகிலிருந்த தெருவில் மற்றொருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்றும் காவல்துறையினர் கூறினர்.
பூங்காவில், சுடப்பட்ட ஆடவர் மீது உயிர் காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் பலன் இன்றி, ஆடவர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு இடங்களிலும் துப்பாக்கிச்சூட்டை ஒருவர் மட்டும் நடத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டது.
நகரின் மேயர் கிரெக் பிஷர் (Greg Fischer) இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகக் கூறினார்.