Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ COVID-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறினாரா?

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் (Cristiano Ronaldo), இத்தாலிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையே வெளிப்படையான வாக்குவாதம் நடந்துள்ளது.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் (Cristiano Ronaldo), இத்தாலிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையே வெளிப்படையான வாக்குவாதம் நடந்துள்ளது.

காற்பந்து நடவடிக்கைகளுக்காக போர்ச்சுகல் (Portugal) சென்றிருந்த ரொனால்டோ, சிறப்பு விமானத்தில் புதன்கிழமை (அக்டோபர் 14) இத்தாலிக்கு திரும்பினார்.

அது பாதுகாப்பு நடைமுறைகளை மீறும் செயல் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

ஆனால், "தாம் விதிகளை மீறவில்லை, அமைச்சர் பொய் சொல்கிறார்" என்று ரொனால்டோ குற்றஞ்சாட்டினார்.

"காற்பந்தாட்டக்காரர்கள் சிலர் பிரபலமாக இருப்பதால், அதிகாரிகளை அவமதித்துப் பொய் சொல்லக்கூடாது" அமைச்சர் ஒரு நேர்காணலில் சொன்னார்.

ரொனால்டோவுக்கு கிருமித்தொற்று இருப்பதாகச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) உறுதிசெய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்