அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் 6 மாதத்தில் 3 தற்கொலைச் சம்பவங்கள்
அமெரிக்கா: ரோவன் பல்கலைக்கழகத்தில் அரையாண்டுக் கல்விப் பருவத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா: ரோவன் பல்கலைக்கழகத்தில் அரையாண்டுக் கல்விப் பருவத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி (New Jersey) மாநிலத்திலுள்ள அந்தப் பல்கலைக்கழகத்தில் நேர்ந்துள்ள ஆக அண்மைய தற்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களும் தற்போதைய மாணவர்களும் சமூக ஊடகங்களில் பள்ளியைச் சாடியுள்ளனர்.
மனநலப் பிரச்சினை உள்ள மாணவர்களுக்கு உதவ பல்கலைக்கழகம் போதுமான முயற்சி எடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அரையாண்டுக் கல்விப் பருவத்தில் நேரும் தற்கொலைச் சம்பவங்கள் இம்முறை வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ளதாய் பல்கலைக்கழகத் தலைவர் ஒப்புக்கொண்டதாக CNN தெரிவித்துள்ளது.
பிரச்சினைக்குத் தீர்வு காண பல்கலைக்கழகம் முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் 100 பேர் அதில் கலந்துகொண்டதாக CNN தெரிவித்துள்ளது.