COVID-19: ரஷ்யா நாளையிலிருந்து அனைத்துலக விமானச் சேவைகளை நிறுத்துகிறது
COVID-19: ரஷ்யா நாளையிலிருந்து அனைத்துலக விமானச் சேவைகளை நிறுத்துகிறது
COVID-19 கிருமித்தொற்று காரணமாக நாளையிலிருந்து அனைத்துலக விமானச் சேவைகளை நிறுத்துகிறது ரஷ்யா.
வெளிநாடுகளிலிருந்து ரஷ்யக் குடிமக்களை அழைத்து வரும் சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.
புது நடவடிக்கையின் மூலம் தனியார் விமானச் சேவைகள், பொதுச்சேவைகள் என அனைத்தும் நிறுத்தப்படும் என்று ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்..
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் கூறியது.