Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா: COVID-19 நோயாளிகளுக்கான வார்டில் தீ விபத்து; மூவர் மரணம்

ரஷ்யாவின் ரியஸான் நகரில் (Ryazan) உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை நேரத்தில்  மூண்ட தீயில் மூவர் மாண்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -


ரஷ்யாவின் ரியஸான் நகரில் (Ryazan) உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை நேரத்தில் மூண்ட தீயில் மூவர் மாண்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

ரியஸான் தலைநகர் மாஸ்கோவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

COVID-19 நோயாளிகளுக்கான வார்டில் தீ மூண்டது.

சுவாசக் கருவிகளில் ஏற்பட்ட கோளாற்றினால் தீ மூண்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

தீயை அணைக்க அங்கிருந்த தாதியர் முயன்றனர். அவர்களது முயற்சி தோல்வியடைந்தது; தீயினால் அவர்கள் காயமடைந்ததாக நகர மேயர் தெரிவித்தார்.

கொரோனா கிருமிப்பரவல் துவங்கியதிலிருந்து ரஷ்யாவில் சில மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் தீச்சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அவை, சுவாசக் கருவி கோளாறுகளால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்