பிரான்ஸ்: பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய சுகாதார ஊழியர்கள் 50 பேருக்கு அபராதம்
பிரெஞ்சுக் காவல்துறை, பாதுகாப்பு இடைவெளி உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சுகாதார ஊழியர்கள் 50 பேருக்கு அபராதம் விதித்துள்ளது.
பிரெஞ்சுக் காவல்துறை, பாதுகாப்பு இடைவெளி உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சுகாதார ஊழியர்கள் 50 பேருக்கு அபராதம் விதித்துள்ளது.
பாரிஸ் நகர மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது பாதுகாப்பு இடைவெளியை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
பொதுச் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி மருத்துவர்கள், தாதிகள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றோர் முகக் கவசங்களை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபிரான்ஸில் புதிதாக 83 பேர், கிருமித்தொற்றால் மாண்டனர்.
இதுவரை 182,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 28,000.