சிங்கப்பூரில் Samsung புதியரகக் கைத்தொலைபேசிகள் அடுத்த மாதம் விற்பனைக்கு
சாம்சுங் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் புதியரக கைத்தொலைபேசிகளான Galaxy S10, S10+ ஆகியவற்றை அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
சாம்சுங் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் புதியரக கைத்தொலைபேசிகளான Galaxy S10, S10+ ஆகியவற்றை அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
விலை விவரங்கள்:
* Galaxy S10 : விலை - $1,078 ( 128 GB கொள்ளளவு)
* Galaxy S10+ : விலை - $2,198 (1TB - கொள்ளளவு)
கைதொலைபேசிகள் வெள்ளை, கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் வெளியாகவிருக்கின்றன.
கைத்தொலைபேசிகளை வாங்க வாடிக்கையாளர்கள் இன்று முதல் Samsung இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்பவர்கள் மார்ச் 5 முதல் கருவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
சாம்சுங் நிறுவனம் அதன் புதிய மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பெயர்
Galaxy Fold . அது ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.