Selfie எடுக்கும் முயற்சியில் விழுந்து இறந்த தம்பதி
40 மீட்டர் உயரச் சுவரிலிருந்து சுற்றுப்பயணிகள் விழுவது இது முதல்முறை அல்ல.
போர்ச்சுகலில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான கடற்கரை ஒன்றை ஒட்டியிருக்கும் சுவரிலிருந்தவாறு selfie எடுக்க முயன்ற ஆஸ்திரேலியத் தம்பதி கீழே விழுந்து மாண்டனர்.
புகைப்படம் எடுக்கும் முயற்சியில் அவர்கள் தவறி விழுந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
புகைப்படம் எடுக்கும்போது கைத்தொலைபேசி கீழே விழுந்திருக்கலாம். அதை எடுக்க முயன்றபோது அவர்கள் விழுந்திருக்கலாம் என்றனர் அதிகாரிகள்.
போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனின் அருகிலிருக்கும் இரிசெய்ரா நகரத்தில் சம்பவம் நடந்தது.
அங்கிருக்கும் 40 மீட்டர் உயரச் சுவரிலிருந்து சுற்றுப்பயணிகள் விழுவது இது முதல்முறை அல்ல.