நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற ஆடவர் பிடிபட்டார்
அமெரிக்காவின் டெனசி (Tennessee) மாநிலத்தில், பிரபல உணவுக்கடை ஒன்றில் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெனசி (Tennessee) மாநிலத்தில், பிரபல உணவுக்கடை ஒன்றில் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
29-வயது நிரம்பிய அந்தச் சந்தேக நபர், டிராவிஸ் ரெங்கிங் (Travis Reinking) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
24 மணி நேரத் தேடலுக்குப் பிறகு, அவரது வீட்டின் அருகே உள்ள வனப் பகுதியில் அவர் பிடிபட்டதாகக் காவல்துறை கூறியது.