நியூஸிலந்துத் துப்பாக்கிச்சூடு: தடுப்புக் காவலில் நால்வர்
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில் நால்வர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில் நால்வர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவத்தில் பலர் மாண்டனர் என்று நியூஸிலந்துக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
அவர்கள் நியூஸிலந்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
டீன்ஸ் அவென்யூ, லின்ஃபோர்ட் அவென்யூ ஆகிய வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது.