பென்சில்வேனியாவில் துப்பாக்கித் தாக்குதல் - பிணை பிடிக்கப்பட்ட அதிகாரிகள் மீட்பு
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில், துப்பாக்கிக்காரர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில், துப்பாக்கிக்காரர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிக்காரனைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இரண்டு துப்பாக்கிக்காரர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
வீட்டில் சுமார் 4 மணி நேரம் பிணை பிடிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடிப் படையினர் மீட்டனர்.
மற்றொரு தாக்குதல்காரர் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.