Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முத்தமிட விருப்பமில்லை-சீறிய சாரைப்பாம்பு

பாம்பென்றால் படையும் நடங்கும். இதென்ன பழங்கதை, அந்தக் கூற்றை மாற்றிக்காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட ஆடவர்...இப்போது மருத்துவமனையில்.

வாசிப்புநேரம் -

பாம்பென்றால் படையும் நடங்கும். இதென்ன பழங்கதை, அந்தக் கூற்றை மாற்றிக்காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட ஆடவர்...இப்போது மருத்துவமனையில்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் சாரைப்பாம்பை முத்தமிட ஆசைப்பட்டார் ஆடவர் ஒருவர். சவால் விட்டார்; சாரைப்பாம்புடன் விளையாடினார், பழகினார்.

இரண்டொரு நாட்களில் காலம் கனிந்துவிட்டதாக நினைத்து, பாம்பை முத்தமிட எத்தனித்தார். 

போட்டுத் தள்ளியது பாம்பு! 

விஷம் விறுவிறுவென்று ஏறியது. கவலைக்கிடமான நிலையில் அவசரமாக மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

தற்போது ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த விபரீத ஆசை இவருக்குத் தேவையா என்கின்றனர், அக்கம்பக்கத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்