நோய்ப்பரவல் சூழலிலும்... பனிக்கட்டிச் சண்டை போட்டு மகிழ்ந்த இளையர்கள்
பிரிட்டனில் நோய்ப்பரவலால் நடப்பிலுள்ள முடக்கநிலையைப் புறக்கணித்து சிலர் பனிக்கட்டிச் சண்டையில் கூடி விளையாடியுள்ளனர்.
பிரிட்டனில் நோய்ப்பரவலால் நடப்பிலுள்ள முடக்கநிலையைப் புறக்கணித்து சிலர் பனிக்கட்டிச் சண்டையில் கூடி விளையாடியுள்ளனர்.
லீட்ஸில் (Leeds) நேற்று முன் தினம் இடம்பெற்ற அந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளையர்கள் பங்கெடுத்தனர்.
ஹைட் பார்க்கில் (Hyde Park) மதிய நேரம் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்வு, Facebook தளத்தில் பதிவானது. அதனையடுத்து, பல இணையவாசிகள் அதைக் குறைகூறியிருந்தனர்.
அந்த இடத்தில் பதிவான காணொளி ஒன்று, அங்குள்ளவர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பனியில் விளையாடிக்கொண்டிருப்பதைக் காட்டியது.
அதனையடுத்து, காவல்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று அனைவரையும் வெளியேற வைத்தனர்.