ஸ்பெயின்: மத்தியப் பகுதியில் குளிர் உறைநிலைக்குக் கீழ் 25 டிகிரி செல்சியஸ் - மக்கள் அவதி
ஸ்பெயின்: மத்தியப் பகுதியில் குளிர் உறைநிலைக்குக் கீழ் 25 டிகிரி செல்சியஸ் - மக்கள் அவதி
ஸ்பெயினின் மத்தியப் பகுதியில் பனிப்புயலால் கடுங்குளிர் நிலவுகிறது.
அங்கு உறைநிலைக்குக் கீழ் 25 டிகிரி செல்சியஸ் தட்பம் பதிவாகியுள்ளது.
கடுங்குளிருக்கு 7 பேர் பலியாயினர்.
பனிக்கட்டியில் சறுக்கி விழுந்து சுமார் 1,200
பேர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
20 ஆண்டுகளில் கண்டிராத குளிரில் மக்கள் அவதியுறுகின்றனர்.
முதியவர்கள் வீட்டிலிருக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
Filomena புயலால் கொட்டிய பனி தற்போது பனிக்கட்டிகளாக மாறியுள்ளது. அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மிதமான குளிர் பிரதேசமான ஸ்பெயினில்
குளிர்காலத்தில் ஓரளவுதான் பனி இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது.