ஸ்பெயின்: ரசாயன ஆலையில் வெடிப்பு - ஒருவர் மரணம், 8 பேர் காயம்
ஸ்பெயினில் உள்ள ரசாயன ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் மாண்டார், 8 பேர் காயமுற்றனர்.
ஸ்பெயினில் உள்ள ரசாயன ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் மாண்டார், 8 பேர் காயமுற்றனர்.
சம்பவம் நேற்று டராகோனா (Tarragona) பகுதியில் நடந்தது.
பல்வேறு ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் அந்த ஆலையில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு தீ மூண்டது.
ஊழியர் ஒருவரைக் காணவில்லை.
ஆலையில் வெடிப்புச் சம்பவம் எப்படி நேர்ந்தது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவம் நேர்ந்த போது அருகில், நச்சு ரசாயனங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விசாரணை தொடர்கிறது.