பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைச் சுட்டு கொன்ற பிரெஞ்சு காவல்துறை
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைச் சுட்டு கொன்றதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைச் சுட்டு கொன்றதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
29 வயது செரிஃப் செக்கட் (Cherif Chekatt), கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள கிறிஸ்துமஸ் சந்தையில், தாக்குதலை நடத்தினார்.
அதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சந்தேக நபரைத் தேடும் பணியில் 700க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுப்பட்டிருந்தினர்.
ஸ்ட்ராஸ்பர்க் நகரின் நியூடொர்ஃப் (Neudorf) பகுதியில் அந்த ஆடவரைக் காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.