சூயெஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டது; கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
சூயெஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற சரக்குக் கப்பல் மீண்டும் முழுமையாக மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
சூயெஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற சரக்குக்
கப்பல் மீண்டும் முழுமையாக மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக தரைதட்டி நின்ற அந்தக் கப்பல், இழுவைப் படகுகளால் வெற்றிகரமாக இழுக்கப்படுவதைக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன.
மீட்புக் குழுவினர் தற்போது, கப்பலை கால்வாயின் Great Bitter Lake எனும் நீர்ப்பகுதிக்கு இழுத்துச் செல்கின்றனர்.
அங்கு, கப்பல் மீது சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
சூயெஸ் கால்வாயின் அடைப்பால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் மதிப்புமிக்க வர்த்தகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சூயெஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் என்று தெளிவாகத் தெரியவில்லை.