Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுமத்திரா புலி இறந்ததற்கு விலங்குத் தோட்டம் காரணமில்லை:நிர்வாகி

அருகிவரும் புலி இனத்தைச் சேர்ந்த சுமத்திரா புலி இறந்ததற்கு லண்டன் விலங்குத் தோட்டத்தை குறைகூறக்கூடாது என்று அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சுமத்திரா புலி இறந்ததற்கு விலங்குத் தோட்டம் காரணமில்லை:நிர்வாகி

படம்: AFP

மெலாத்தி எனும் 10 வயதுப் பெண் புலி, இனப்பெருக்கத்துக்காக அஸிம் எனும் 7 வயது ஆண் புலியுடன் விடப்பட்டபோது, ஆண் புலியால் தாக்கப்பட்டு இறந்தது.

மெலாத்தி இறந்த அதிர்ச்சியில் இருந்து விலங்குத் தோட்ட ஊழியர்கள் இன்னும் மீளவில்லை என்றும் நிர்வாகி கூறினார்.

இரு புலிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட 10 நாட்கள் கொடுக்கப்பட்டன.அந்தக் கால அவகாசம் போதாது என்று தற்போது குறைகூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதை லண்டன் விலங்குத் தோட்டம் மறுத்துள்ளது.

இரு புலிகளும் நன்றாகப் பழகி வந்த வேளையில் ஏற்பட்ட எதிர்பாராச் சம்பவம் அது என்று விலங்குத் தோட்டம் விளக்கமளித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்