சிட்னியில் பற்றியெரியும் காட்டுத் தீயை தற்போது கட்டுப்படுத்த முடியாது : ஆஸ்திரேலிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் பற்றியெரியும் காட்டுத் தீயை தற்போது கட்டுப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் பற்றியெரியும் காட்டுத் தீயை தற்போது கட்டுப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 300,000 ஹெக்டர் பரப்பில் நெருப்பு பற்றியெரிகிறது.
தீ பரவும் இடங்களில் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க முடியாத குடியிருப்பாளர்கள் உடனே அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அக்டோபர் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை ஆறு பேர் மாண்டு விட்டனர்.
700-க்கும் அதிகமான வீடுகள் நாசமாகிவிட்டன.