Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிட்னி: கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் மனநலப் பிரச்சினை உடையவர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாது ஒருவரைக் கத்தியால் குத்திய ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாகவும் அவர் தனித்துச் செயல்பட்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிட்னி: கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் மனநலப் பிரச்சினை உடையவர்

படம்: Twitter/Cat Cranston

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாது ஒருவரைக் கத்தியால் குத்திய ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருந்ததாகவும் அவர் தனித்துச் செயல்பட்டதாகவும் காவல்துறை கூறியிருக்கிறது.

மாதைக் குத்துவதற்கு முன், இன்று பிற்பகல் மத்திய வர்த்தக வட்டார வீதியில் அவர் கத்தியுடன் ஓடினார்.

அதற்கு முன்பாகக் குடியிருப்புப் பேட்டையில் வேறொரு மாதை அவர் கொன்றதாகவும் நம்பப்படுகிறது.

வீதியில் குத்தப்பட்ட மாது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் சமையலுக்குப் பயன்படும் கத்தியுடன் ஓடுவதையும், அவரைச் சிலர் துரத்துவதையும் பார்த்ததாகச் சிலர் கூறினர்.

வேறு சிலரையும் குத்த அந்த ஆடவர் முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அவரைப் பிடித்துக்கொடுத்தனர். காவல்துறை அவரைத் தடுத்துவைத்துள்ளது.

தற்போது சிட்னி மத்திய வர்த்தக வட்டாரத்தில் எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்