சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடிப்புச் சம்பவம் - 39 பேர் மரணம்
சிரியாவின் இட்லிப் மாநிலத்தில் வெடிப்புச் சம்பவம் காரணமாக கட்டடம் சரிந்ததில் 12 சிறுவர்கள் உட்பட 39 பேர் மாண்டனர்.
சிரியாவின் இட்லிப் மாநிலத்தில் வெடிப்புச் சம்பவம் காரணமாக கட்டடம் சரிந்ததில் 12 சிறுவர்கள் உட்பட 39 பேர் மாண்டனர்.
சர்மடா நகரத்தில் இருக்கும் அந்தக் கட்டடத்தில் ஆயுதக் கடத்தல்காரரின் ஆயுதங்களும் மற்ற சாதனங்களும் இருந்ததாக நம்பப்படுகிறது.
இன்னும் பலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கிளர்ச்சிக்காரர்களின் வசமுள்ள ஒரே பெரிய வட்டாரம் இட்லிப். அதை சிரியாவின் ஆயுதப்படை அடுத்துக் குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களை மீட்கும் பணி நேற்று (ஆகஸ்ட் 12) தொடங்கியது.
இன்னும் பலரைக் காணவில்லை.
சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.
வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணம் இன்னும் தெரியவில்லை.