செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினம் - ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் கொடி ஏற்றிய தலிபான்
செப்டம்பர் 11 தாக்குதல் நினைவை, தலிபான்கள் அமைதியான முறையில் அனுசரித்துள்ளனர்.
செப்டம்பர் 11 தாக்குதல் நினைவை, தலிபான்கள் அமைதியான முறையில் அனுசரித்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளில் அதிகாரபூர்வமாக புதிய அரசாங்கம் அமைப்பதை தலிபான்கள் தவிர்த்துக் கொண்டனர்.
மாறாக, காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் தலிபான்கள், தங்கள் கொடியை ஏற்றியுள்ளனர்.
பாஞ்ச்ஷிர் (Panjshir) உள்ளிட்ட பகுதிகளையும் சேர்த்து ஆப்கானிஸ்தானை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகத் தலிபான்களின் பேச்சாளர் கூறினார்.
-AP