Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தலை துண்டிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆசிரியர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான கான்ஃபிலான்ஸ் செயின்ட் ஒனொரீனில் (Conflans St Honorine) நேற்று ஓர் ஆசிரியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

வாசிப்புநேரம் -

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான கான்ஃபிலான்ஸ் செயின்ட் ஒனொரீனில் (Conflans St Honorine) நேற்று ஓர் ஆசிரியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

திரு. சாமுவேல் பேட்டி (Samuel Paty) என்ற அந்த ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளி ஆசிரியரான அவர், இந்த மாதத் தொடக்கத்தில் வகுப்பில் குடிமையியல் பாடம் நடத்தினார். அப்போது இஸ்லாமிய மாணவர்கள் கைகளை உயர்த்துமாறு திரு. பார்ட்டி கேட்டுக்கொண்டார். அவர் நபிகள் நாயகத்தைப் பற்றிய கேலிச் சித்திரம் காட்டவிருப்பதால் முஸ்லிம் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே இருக்குமாறு அவர் சொன்னார். 

திரு. பேட்டி காட்டிய படம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது. ஆனால், அதன் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனவம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து திரு. பேட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

கொலை நடந்த இடத்துக்குக் காவல்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது சந்தேக நபர், தம்மை நெருங்கி வரவேண்டாம் என்று மிரட்டினார்.

பிறகு, காவல்துறையினர் சந்தேக நபரைச் சுட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

சந்தேக நபர் யார், அவர் காணொளியைப் பார்த்தாரா என்பதைக் காவல்துறையினர் தெளிவுபடுத்தவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்