Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க்: டைம்ஸ் சதுக்கக் கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கார் அசம்பாவிதத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அதிகமான போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
நியூயார்க்: டைம்ஸ் சதுக்கக் கார் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

படம்: John-Marshall Mantel/Daily Mail via AP, Pool

நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த கார் அசம்பாவிதத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அதிகமான போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் 'K-2' எனப்படும் செயற்கை மரிஜூவானாவை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருந்ததாக, தகவல்கள் வெளியாகின.

26-வயது ரிச்சர்ட் ரோஜாஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில், பாதசாரிகளுக்கு உரிய நடைபாதையில், அவர் காரை ஓட்டிச் சென்றதில் ஒரு மாது மாண்டார். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்