உயிரணுக்கள் பிராணவாயுவுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்த மூவருக்கு நொபெல் பரிசு
உயிரணுக்கள் எவ்வாறு சுற்றுச்சூழலில் உள்ள பிராணவாயுவின் அளவை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் மூவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
உயிரணுக்கள் எவ்வாறு சுற்றுச்சூழலில் உள்ள பிராணவாயுவின் அளவை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் மூவருக்கு நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேலின் (William Kaelin), கிரெக் செமன்ஸா (Gregg Semenza), பிரிட்டனின் பீட்டர் ரெட்கிலிஃவ் (Peter Ratcliffe) ஆகியோரின் ஆய்வு புற்றுநோய் சிகிச்சைக்குப் புதிய வழியைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறப்பட்டது.
பரிசாக வழங்கப்பட்டுள்ள 914,000 டாலரை மூவரும் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர்.